2020ஆம் ஆண்டில் விளையாட்டு உலகிற்கு ஓய்வு கிடைத்த பிறகு, 2021ஆம் ஆண்டானது உலக அரங்கைப் போல, இலங்கைக்கும் ஒப்பீட்டளவில் சிறந்த ஆண்டாக அமைந்தது. அதில் சில மறக்க முடியாத தருணங்களும் எமது மனதில் இடம்பிடித்தன.
கொரோனா வைரஸ் தொற்று நோய் இன்னும் சீற்றத்துடன் இருக்கும் அதேவேளையில், 2021ஆம் ஆண்டைப் பொறுத்தவரை இலங்கையின் விளையாட்டுத் துறையானது கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டன.
கொரோனா வைரஸின் 3ஆவது அலை காரணமாக கிட்டத்தட்ட சில மாதங்களாக நாடு முழுவதும் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டதுடன். விளையாட்டு உள்ளிட்ட முக்கியமான பல அம்சங்கள் இதனால் தடைப்பட்டன.
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், சுகாதார அமைச்சின் அனுமதியுடன் ஒரு சில விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்றன.
நிறைவு பெற்றுள்ள 2021ஆண்டு இலங்கையின் விளையாட்டுத்துறையில் ஓரளவு முன்னேற்றத்தையும், வெற்றியையும் கொடுத்த ஆண்டாக விளங்கியது.
இதில் லசித் மாலிங்க,திசரபெரேரா, இசுரு உதான போன்ற வீரர்களின் ஓய்வு, யுபுன் அபேகோன், உஷான் திவங்க ஆகியோரது மெய்வல்லுநர் சாதனைகள். தினேஷ் பிரியன்த ஹேரத் பாராலிம்பிக் தங்கப் பதக்கம், சர்வதேச கால்பந்து சம்மேளளத்தின் தலைவரின் இலங்கை வருகை, இலங்கை கால்பந்து அணியின் அசுர முன்னேற்றம், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் இராஜினாமா மற்றும் மைதானம் நிறைந்த ரசிர்களுடன் அரங்கேறிய எல்பிஎல் தொடர் உள்ளிட்ட விடயங்கள் முக்கிய இடம் பிடித்தன.
2021இல் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய விளையாட்டு நிகழ்சிசகளும்,அதன் முக்கிய தருணங்களையும் இந்தசிறப்புக் கட்டுரையில் பார்க்கலாம்.
ஜனவரி
இலங்கை அணியை வீழ்த்தி 2போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
நாட்டில் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிப்பதால் 2020இற்கான தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை ரத்து செய்ய தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடவடிக் கை எடுத்தது.
இலங்கை தேசிய அணியில் விளையாடிய, சுழல்பந்து வீச்சு சகலதுறை வீரர் செஹான் ஜயசூரிய, இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சிரேஷ்ட வீர வீராங்கனைகளுக்கான 40ஆவது தேசிய ஸ்குவாஷ் சம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் பிரிவில் தியரவிந்து லக்சிறியும்,மகளிர் பிரிவில் பெதும் சாலிஹா இஸ்ஸடீனும் சம்பியனாக மகுடம் சூடினர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளரான அசந்த டி மெல் தனது பதவியினை இராஜினாமா செய்தார்.
பெப்ரவரி
ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடரை இலக்காகக் கொண்டு இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் பொலன்னறுவையில் நடாத்தப்பட்டதேசிய பளுதூக்கல் தகுதிகாண் போட்டியில் ஏழு இலங்கை வீரர்களால் 16இலங்கை சாதனைகள் முறியடிக்கப்பட்டன.
இலங்கை கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் இயக்குனராக, முன்னாள் அவுஸ்திரேலிய வீரரும்,இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமான டொம் மூடி நியமிக்கப்பட்டார்.
பெண்களுக்கான பளுதூக்கலில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆஷிகா விஜயபாஸ்கர் தேசிய பளுதூக்கல் தகுதிகாண் போட்டியில் 71கிலோ எடைப் பிரிவில் களமிறங்கி தனது இரண்டு தேசிய சாதனைகளை முறியடித்தார்.
இலங்கை கிரிக்கெட்டை வளப்படுத்தும் முகமாக அரவிந்த டி சில்வா தலைமையிலான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான உபுல் தரங்க, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
மார்ச்
ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் டங்கன் வைட் 400மீற்றர் தடை தாண்டல் போட்டியில்,வெள்ளிப் பதக்கத்தை வென்ற நாளான ஜூலை மாதம் 31ஆம் திகதியை, தேசிய விளையாட்டு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவின் டெக்சாஸில் நடைபெற்ற டெக்சாஸ் ரிலேஸ் சம்பியன்ஷிப் தொடரில் உயரம் பாய்தலில் பங்குகொண்ட இலங்கைவீரர் உஷான் திவங்க பெரேரா, 2.28மீற்றர் உயரம் பாய்ந்து இலங்கையின் பதினேழுவருடங்கள் பழமையான உயரம் பாய்தல் சாதனையை முறியடித்தார்.
ஏப்ரல்
இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் 17ஆவது தலைவராக காஞ்சன ஜயரட்ன போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கை விமானப்படையைச் சேர்ந்த முன்னணி நீச்சல் வீரரான, ரொஷான் அபேசுந்தர பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து புதிய சாதனை படைத்தார்.
ஐசிசியின் ஊழல் தடுப்புசட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் டில்ஹாரலொக்கு ஹெட்டிகேவுக்கு, 8ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய சிரேஷ்ட பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 55கிலோ எடைப்பிரிவில் பங்குகொண்ட இலங்கை வீரர் டிலங்க இசுரு குமார வெண்கலப் பதக்கத்தைவென்றார்.
ஐ.சி.சி.யின் மூன்று வகையான ஊழல் தடுப்பு விதிகளை மீறிய இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான நுவன் சொய்ஸாவுக்கு 6வருட தடை விதிக்கப்பட்டது.
விஸ்டன் இதழினால் 2000ஆம் ஆண்டுகளின் தலை சிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கையின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் பெயரிடப்பட்டார்.
மே
டோக்கியோவில் இவ்வருடம் நடைபெற்றஒலிம்பிக் விளையாட்டுவிழாவில் பங்குபற்றும் முதல் இலங்கையர் என்ற பெருமையை குதிரைச் சவாரி வீராங்கனை மெட்டில்டா கார்ல்சன் பெற்றுக் கொண்டார்.
இலங்கையின் கனிஷ்ட ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கிஹானி, 2020டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார்.
துருக்கியில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுநர் தொடரில் இலங்கை வீராங்கனை சாரங்கி டி சில்வா,பெண்களுக்கான நீளம் பாய்தலில் 6.44மீற்றர் தூரத்தைப் பாய்ந்து புதிய இலங்கை சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் திசர பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வுபெறுவதாக அறிவித்தார்.
இத்தாலியின் சவோனாவில் நடைபெற்ற சர்வதேசசிட்டே டி சவோனா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பங்குகொண்ட இலங்கை வீரர் யுபுன் அபேகோன் 100மீற்றர் போட்டியை 10.15செக்கன்களில் கடந்து தனது சொந்த இலங்கை சாதனையை முறியடித்தார்.
இலங்கையின் உயரம் பாய்தல் வீரரான உஷான் திவங்க பெரேரா, டெக்சாஸில் நடைபெற்ற ஸ்டார் கன்பிரன்ஸ் சம்பியன்ஷிப் போட்டியில் 2.30மீற்றர் உயரம் பாய்ந்து, இலங்கை சாதனையையும், தெற்காசிய சாதனையையும் முறியடித்தார்.
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அவிஷ்க குணவர்தனவுக்கு எதிராக எமிரேட்ஸ் கிரிக்கெட் சபை, முன்வைத்திருந்த இரண்டு விதமான ஊழல் குற்றச்சாட்டுகளையும் ஏகமனதாக நீக்குவதாக ஐசிசியின் சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் அறிவித்தது.
இலங்கை கிரிக்கெட் தலைவராக ஷம்மி சில்வா,போட்டியின்றி மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
ஜுன்
டுபாயில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டைபோட்டியில் இலங்கை வீராங்கனை நதீக்கா புஷ்பகுமாரி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண வில்வத்தைப் போட்டியின் ரிகர்வ் பிரிவில் இலங்கை வீரர் ரஜீவ் டி சில்வா தங்கப் பத்தகம் வென்றார். உலகக் கிண்ண வில்வித்தைபோட்டியில் தனி நபர் பிரிவில் இலங்கை வென்ற முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
இந்தியாவின்,பாட்டியாலா நகரில் நடைபெற்ற இந்தியமா நிலங்களுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட் டியில் லக்ஷிகாசுகன்தி, அமாஷா டி சில்வா, நிமாலி லியனாராச்சி மற்றும் காலிங்ககுமாரகே ஆகியோர் பதக்கங்களை வென்று அசத்தினர்.
இந்தியாவின் பாட்டியாலாவில் நடைபெற்ற இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தேசியமெய்வல்லுநர் போட்டியில் பெண்களுக்கான 4×100அஞ்சலோட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை அணி,19வருடங்களுக்குப் பிறகு 4×100அஞ்சலோட்டத்தில் அதிசிறந்த காலப்பெறுமதியை பதிவுசெய்தது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படும் ஹோல் ஒப் பேம் விருதுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் பெயர் உள்வாங்கப்பட்டது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜஸ்வர் உமர் தெரிவாகினார்.
ஜுலை
சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபற்ற ஆசிய கரப்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகான் போட்டியில் உஸ்பகிஸ்தானை 3-0என இலகுவாக வீழ்த்திய இலங்கை குறித்த தொடருக்கு தகுதியினைப் பெற்றுக் கொண்டது.
இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் முதல்பெண் நடுவராக பணியாற்றும் வாய்ப்பை டி.நெல்கா ஷிரோமலா பெற்றுக் கொண்டார்.
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவுபெட்மிண்டன் முதல் சுற்றில் பங்கு கொண்ட இலங்கையின் நட்சத்திர வீரர் நிலூக கருணாரத்ன, 2போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி ஏமாற்றத்துடன் ஒலிம்பிக் அரங்கிற்கு விடைகொடுத்தார்.
சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ரி-20கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில், இலங்கை அணி 7விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினை பதிவு செய்திருப்பதுடன் மூன்றுபோட்டிகள் கொண்ட ரி-20தொடரினையும் 2-1எனக் கைப்பற்றியது.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் இசுரு உதான, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஆகஸ்ட்
டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதல் ரி 46போட்டியில் உலகசாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று இலங்கையின் தினேஷ் பிரியன்த ஹேரத் புதிய வரலாறு படைத்தார்.
டோக்கியோ பாராலிம்பிக் ஆண்களுக்கான ரி 64ஈட்டிஎறிதல் போட்டியில் 65.61மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த இலங்கை வீரர் சமித்ததுலான் வெண்கலப் பதக்கத்தைசுவீகரித்தார்.
செப்டெம்பர்
சுவிட்சர்லாந்தின் சூரிக்கில் நடைபெற்றடயமண்ட் லீக் ஆண்களுக்கான 100மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் யுபுன் அபேகோன் 9ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்தியன் ப்ரோகபடிபிரீமியர் லீக் வரலாற்றில் வீரர்களுக்கான ஏலத்தின் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டமுதல் இலங்கை வீரர் என்ற பெருமையை இலங்கை கடற்படையைச் சேர்ந்த 25வயதான அன்வர் சஹீப் பாபா பெற்றுக்கொண்டார்.
இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இலங்கை இராணுவப்படை குத்துச்சண்டைவீரரான சஜீவ நுவன், ரஷ்யாவில் நடைபெற்ற 58ஆவது உலக இராணுப்படை குத்துச்சண்டைசம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப்பதக்கம் வென்றார்.
உலக மெய்வல்லுநர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வீரர்களுக்கான புதிய தரவரிசையில் இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், 40ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
ரி -20உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றின்போது இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டார்.
ஒக்டோபர்
இத்தாலியில் நடைபெற்ற உலகக் கிண்ண சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டித் தொடரில் 6ஆவது இடத்தை இலங்கை சக்கர நாற்காலி டென்னிஸ் அணி பெற்றுக்கொண்டது.
ஆசிய மேசைப்பந்து சம்பியன்ஷிப் தனி நபர் பிரிவு போட்டிவரலாற்றில் முதல் 16இடங்களுக்குள் தகுதிபெற்ற முதலாவது இலங்கையர் என்ற சாதனையை முத்துமாலிபிரியதர்ஷனி படைத்தார்.
ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கையின் முன்னாள் குறுந்தூர ஓட்ட வீரங்கனையான சுசந்திகா ஜயசிங்க விளையாட்டுத்துறை அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
இலங்கையின் ரக்பி விளையாட்டுக்கு அளப்பெரிய சேவையாற்றிய முன்னாள் வீரரும், பயிற்சியாரும், பிரபல ஊடகவியலாளருமான சந்திரஷான் பெரேரா தனது 60வயதில் காலமானார்.
2022இல்நடை பெறவுள்ள ஆசிய கால்பந்து சம்மேளனத்தின்) 23வயதின் கீழ் ஆசிய கிண்ணத்திற்கான தகுதிகாண் சுற்றுத் தொடரில் பங்குகொண்ட இலங்கை அணி, தாம் பங்கேற்ற 3போட்டிகளிலும் தோல்வியடைந்தது.
கிரிக்கெட்டின் சட்டவிதிமுறைகளை தீர்மானிக்கும் மெரில்போன் கிரிக்கெட் கழகம் இலங்கையின் முன்னாள் சுழல் பந்து ஜாம்பவான் ரங்கன ஹேரத்துக்கு வாழ்நாள் உறுப்பினர் பதவியை வழங்கியது.
இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் பந்துல வர்ணபுர காலமானார்.
நவம்பர்
இலங்கை கபடி அணியின் பயிற்சியாளராக தமிழ் நாட்டைச் சேர்ந்த கே.பாஸ்கரன் நியமிக்கப்பட்டார்.
99ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் ஐந்து இலங்கை சாதனைகளும், 3போட்டி சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.
99ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட வடக்கின் நட்சத்திரவீரரான அருந்தவராசா புவிதரன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்துதொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை பெனால்டியில் 3-1என்றகோல்கள் கணக்கில் வீழ்த்திய சீசெல்ஸ் அணி சம்பியனாக மகுடம் சூடியது.
இலங்கையில் உள்ள பிரதான கழகங்களுக்கிடையில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ராகம கிரிக்கெட் கழகத்தை 36ஓட்டங்களால் வீழ்த்தி தமிழ் யூனியன் கழகம் சம்பியனாகத் தெரிவாகியது.
சர்வதேச கால்பந்து சம்மேளளத்தின் தலைவர் ஜியானி இன்பன்டீனோ, இரண்டுநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தார்.
டிசம்பர்
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் பாராவிளையாட்டு விழாவில் பங்கு கொண்ட இலங்கை வீரர்கள் 4தங்கம், 4வெள்ளி, 4வெண்கலப் பதக்கங்கள் என ஒட்டுமொத்தமாக 12பதக்கங்களை சுவீகரித்தனர்.
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற பொதுநலவாய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை அணி 7பதக்கங்களை வென்று அசத்தியது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தரின், பயிற்றுவிப்புகாலம் மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் நிறைவுக்கு வந்தது.
சர்வதேச நீச்சல் சம்மேளனத்தின் புதிய தரவரிசையின்படி, ஆண்களுக்கான பின்நோக்கிய நீச்சல் போட்டியில் உலகின் முதல் 50வீரர்களில் இலங்கை நீச்சல் வீரர் அகலங் கபீரிஸ் இடம்பிடித்து அசத்தினார்.
இலங்கையின் நட்சத்திர மரதன் ஓட்டவீராங்கனையான ஹிருனி விஜேயரத்ன, கலிபோர்னியாவில் நடைபெற்ற சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியில் பங்கு கொண்டு 10ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் 19வயதின் கீழ் பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சம்மேளன கிண்ண தொடரில் இலங்கை அணி தாம் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
லங்கா பிரீமியர் 2021ஆம் ஆண்டு தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 23ஓட்டங்களால் கோல் கிளேடி யேட்டர்ஸ் அணியை வீழ்த்தி, தொடரின் சம்பியனாக இரண்டாவது முறையாக நாமம் சூடியிருக்கின்றது.
இலங்கை கிரிக்கெட் வீரர் ஜீவன் மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 33ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 170புள்ளிகளைப் பெற்ற கம்பஹா மாவட்டம் தொடர்ச்சியாக ஏழாவது தடவையாக சம்பியனாக மகுடம் சூடியது.
ஆசிய பங்கபந்து மத்திய வலய ஆடவர் கரப்பந்தாட்ட கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை 3-0என வீழ்த்தி இலங்கை அணி சம்பியன் கிண்ணத்தை வெற்றிக்கொண்டது.
பஸ்ரிப் --பாணந்துறை