இலங்கையின் முன்னணி காகிதாதிகள் மற்றும் பயிலல் சாதன வர்த்தக நாமமான அட்லஸ், தனது வருடாந்த ரிதீ விஹாரை நன்கொடைத் திட்டத்தை முன்னெடுத்திருந்தது. தொடர்ச்சியான 19ஆவது வருடமாகவும் சுமார் 2300 குறைந்த வசதிகள் படைத்த சிறுவர்களுக்கு உதவும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அட்லஸ் சிப்சவி நிகழ்ச்சித் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், ரிதீ கம, ரிதீ விஹாரையைச் சேர்ந்த சங்கைக்குரிய திப்பட்டுவே புத்தரக்கித தேரரின் மேற்பார்வையின் கீழ் நன்கொடை வழங்கல் இடம்பெற்றது. இந்த ஆண்டு நன்கொடை வழங்கும் நிகழ்வின் போது 100 மாணவ பௌத்த பிக்குகளுக்கும் அட்லஸ் கொப்பிகள் வழங்கப்பட்டிருந்தன.
அட்லஸ் அக்சிலியா கம்பனி. பிரைவட் லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளர் அசித சமரவீர கருத்துத் தெரிவிக்கையில், “நாடு முழுவதையும் சேர்ந்த சிறுவர்களுக்கு 62 வருடங்களுக்கு மேலாக சேவைகளை வழங்கி வருவதுடன், அவர்களின் கடினமான சூழ்நிலைகளைப் பற்றி இரகசியமான முறையில் நாம் அறிந்து கொண்டு, ஒவ்வொரு பிள்ளைக்கும் சிறந்த கல்வி பயிலல் தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கு எம்மாலான பங்களிப்புகளை வழங்க எம்மை அர்ப்பணித்துள்ளோம். ரிதீ விஹாரையுடனான எமது நிகழ்ச்சித் திட்டம் சுமார் இரண்டு தசாப்த காலமாக முன்னெடுக்கப்படுகின்றது. எமது தேசத்தின் எதிர்கால சந்ததியினருக்கு உதவும் எமது நடவடிக்கைகளை அட்லஸ் சிப்சவி நடவடிக்கைகளின் கீழ் கொண்டு வந்துள்ளோம். மேலும், அட்லஸ் புத்தகமொன்றை எவரும் கொள்வனவு செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அட்லஸ் சிப்சவி புலமைப் பரிசில் நிதியத்துக்கு ஒரு பகுதி பங்களிப்பு செய்யப்படுகின்றது. இலங்கையில் காணப்படும் குறைந்த வசதிகள் படைத்த சிறுவர்களின் கல்விச் செயற்பாடுகள் அவர்களின் பெற்றோரின் இழப்பு மற்றும் பொருளாதார சிக்கல் நிலை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உதவக்கூடிய வழிமுறைகள் பற்றிய கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுப்பதற்கு சிப்சவி மெய்நிகர் கலந்துரையாடல் ஒன்றையும் முன்னெடுத்திருந்தோம்.” என்றார்.
இந்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் சங்கைக்குரிய திப்பட்டுவே புத்தரக்கித தேரர் கருத்துத் தெரிவிக்கையில், “அட்லஸ் மற்றும் ரிதீ விஹாரை நீண்ட காலமாக பேணி வரும் பங்காண்மையினூடாக, கடந்த 18 வருட காலப்பகுதியில் ஆயிரக் கணக்கான சிறுவர்களுக்கு தமது கல்வியைத் தொடர உதவியாக அமைந்திருந்தது. பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இந்தக் காலகட்டத்தில் அட்லஸ் முன்னெடுத்துள்ள இந்தத் திட்டம் தொடர்பில் அட்லஸுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.