நுவரெலியாவிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் | தினகரன் வாரமஞ்சரி

நுவரெலியாவிலும் மக்கள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா  பிரதேச மக்கள் கோட்டா பதவி விலக வேண்டும் என கோரி நுவரெலியா நகரில் நேற்று  (9) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நுவரெலியா பிரதான நகரிலுள்ள அனைத்து  கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் நுவரெலியா பிரதான  பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக அணிதிரண்ட மக்கள் பழைய கடை வீதியினூடாக  பேரணியாக சென்று மீண்டும் பிரதான பேருந்து தரிபிடத்திற்கு முன்பாக வருகை  தந்து அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும்  இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலவாக்கலை குறூப் நிருபர்

 

Comments