வீட்டின் மீது விமானம் மோதி விபத்து; 10 பேர் பலி | தினகரன் வாரமஞ்சரி

வீட்டின் மீது விமானம் மோதி விபத்து; 10 பேர் பலி

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சிறிய பயணிகள் விமானம் நேற்று (17) விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.

இரண்டு  இன்ஜின் கொண்ட பைபர் 23 அப்பாச்சி விமானம், இரண்டு விமானிகள் உள்பட 6 பேரை  கொண்டு, மணிலாவின் புளகான் மாகாணத்தில் இருந்து லயோக் என்ற இடத்திற்கு  புறப்பட்டது.

ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், ஒரு வீட்டின் மீது  மோதியுள்ளது. இதில், விமானத்தில் இருந்த 6 பேரும் உயிரிழந்தனர். விமானம்  மோதியதால் வீட்டில் தீ ஏற்பட்டு, அங்கிருந்த நான்கு பேர் உயிரிழக்க  நேரிட்டது. இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மீட்பு பணிகள்  தீவிரமாக நடந்து வருகிறது.

Comments