![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2018/03/18/2.jpg?itok=VH0IScvo)
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சிறிய பயணிகள் விமானம் நேற்று (17) விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.
இரண்டு இன்ஜின் கொண்ட பைபர் 23 அப்பாச்சி விமானம், இரண்டு விமானிகள் உள்பட 6 பேரை கொண்டு, மணிலாவின் புளகான் மாகாணத்தில் இருந்து லயோக் என்ற இடத்திற்கு புறப்பட்டது.
ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், ஒரு வீட்டின் மீது மோதியுள்ளது. இதில், விமானத்தில் இருந்த 6 பேரும் உயிரிழந்தனர். விமானம் மோதியதால் வீட்டில் தீ ஏற்பட்டு, அங்கிருந்த நான்கு பேர் உயிரிழக்க நேரிட்டது. இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.