புலனடக்கம்! | தினகரன் வாரமஞ்சரி

புலனடக்கம்!

நமக்கு வரும் துன்பங்களில் பெரும்பாலான துன்பங்களுக்குக் காரணம்  புலன்களை முறையாக இயக்கத் தெரியாததே ஆகும். மெய், வாய், கண், மூக்கு, செவி  ஆகிய உணர்கருவிகள் மூலம் பெறும், தொடு, சுவை, பார்வை, வாசனை, கேட்கும்  உணர்வுகளில் மணமானது மயங்கி, மீண்டும் மீண்டும் அவைகளை உபயோகப்படுத்தி  உடலுக்கும் உள்ளத்துக்கும் துன்பத்தை அளிப்பதோடு, வாழ்வை வெறுக்கச்  செய்கின்றது. 

இதனாலேயே நமது முன்னோர் இந்த ஐந்தையும் அடக்க வேண்டும் என்று  கூறினார்கள். ஆனால், உடல், மன, இயக்கத் தேவைகள் இருக்கும் வரையில் இவைகளை  அடக்க முடியாது. அப்படியானால் என்ன செய்வது? புலன்கள் வழியே செயற்படும்  மனதை மீட்டு அதை புலன்களை வழிநடத்தும் மனதாக மாற்ற வேண்டும். இம்மன  வலிமையால் புலன்களை முறையாக தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தி பிறநேரங்களில்  அமைதிப்படுத்த வேண்டும். 

எனவே, அமரர் எனப்படும் தேவர்களால் கூட இவைகளை அடக்க முடியாது. அப்படி  இவைகள் அனைத்தும் இயக்கவில்லை எனில் அது உயிரற்ற ஜடப்பொருளாக மட்டுமே  இருக்க முடியும். எனவே, ஐம்புலன்களை அடக்காமல் அளவறிந்து தேவைக்கு மட்டும்  பயன்படுத்துவதும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

சோ. வினோஜ்குமார், 

தொழினுட்ப பீடம், 

யாழ். பல்கலைக்கழகம், 

கிளிநொச்சி.

Comments