![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/04/17/a24.jpg?itok=r3_Qtbar)
இளவயதினர் மத்தியில் இதயநோய் பாதிப்புகள் அதிகரித்துவருவதற்கு பல்வேறு காரணிகளை மருத்துவ உலகினர்முன்வைக்கின்றனர். கொரோனா நோய்த் தொற்றின் முதல்மற்றும் இரண்டாம் அலைகளைத் தடுப்பதில் அரசு தீவிர கவனம்செலுத்தியதால் இதர நோய்களை கண்காணிக்கும் பணிகள்குறைந்துவிட்டன. இதயநோய் மரணங்கள் ஏற்படுவதற்கு இது ஒருகாரணம்' என்கின்றனர் சுகாதாரத்துறை வல்லுநர்கள். கொரோனா தொற்றுப் பரவல் என்பது படிப்படியாக குறைந்து வருகிறது.
அதேநேரம், கொரோனா காரணமாக பெருகி வரும் இணை நோய்களால் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். குறிப்பாக, இளவயதினர் மத்தியில் இதயநோய் மரணங்கள் அதிகரித்து வருவது என்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உடற்பயிற்சியினை மேற்கொள்ளும்போதும் நண்பர்களுடன் உரையாடும்போதும் திடீரென இளவயதினருக்கு ஏற்படும் மாரடைப்புகளுக்கு பல்வேறு காரணங்களை மருத்துவத்துறையினர் முன்வைக்கின்றனர்.
தொற்றா நோய்கள் (NCD) மூலம் வரக்கூடிய இறப்பு விகிதம் என்பது 63சதவீதமாக உள்ளது. குறிப்பாக 30முதல் 70வயது வரையில் உள்ளவர்களில் 23சதவிதம் பேருக்கு இதன்மூலம் இறப்பு நேருவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை குறைபாட்டைப் பொறுத்தவரையில் நான்கில் ஒருவருக்கும் (25சதவீதம்) ரத்தக் கொதிப்பு என்பது மூன்றில் ஒருவருக்கும் (33சதவீதம்) உள்ளது எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அதிலும், தொற்றா நோய்களால் ஏற்படும் பாதிப்பு என்பது பெண்களைவிட ஆண்களுக்குத்தான் அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது. உடல்ரீதியாக இயங்காமல் இருப்பது, உணவு முறை மாற்றம் (அதிக துரித உணவு பயன்பாடு, அதிக உப்பை சேர்ப்பது, காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது குறைந்தது) மது மற்றும் புகை, மனஅழுத்தம் ஆகியவற்றை பிரதான காரணங்களாக இந்த ஆய்வு முன்வைக்கிறது.நாம் உண்ணும் உணவில் 3முதல் 5கிராம் உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், துரித உணவுகளில் 10முதல் 15கிராம் அளவுக்கு உப்பு உள்ளது. உணவில் உப்பு அதிகமாக இருந்தால் சுவை இருக்கும். ஆனால் அவை உடலுக்கு மிகவும் கேடு விளைவிப்பவை. மேலும், சுற்றுச்சூழல் சீர்கேடும் சர்க்கரை, இதயநோய் பாதிப்புகள் அதிகமாவதற்குக் காரணம்.
தமிழ்நாட்டில் 50சதவீதம் பேருக்கு சர்க்கரை குறைபாடும் ரத்த அழுத்தமும் இருப்பதே தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் நோய்க்கான மருந்து எடுத்தும் அவை கட்டுப்பாட்டில் இல்லை. சர்க்கரை குறைபாட்டுக்காக அரசு வழங்கும் மருந்துகளிலும் தரம் இருப்பதில்லை. ஆனால், தனியாரிடம் வாங்கும் மருந்துகளில் சர்க்கரை நோயோடு ரத்தக்கொதிப்பும் கட்டுக்குள் வருகிறது கடந்த இரண்டு வருடங்களாக தொற்றா நோய்களான (NCD) நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அஸ்துமா, புற்றுநோய், இதயநோய் ஆகியவை அதிகரித்து வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதில் கவனம் செலுத்தியதால் இதனை கண்காணிக்கும் பணிகள் என்பது குறைந்துவிட்டன. இது மிக முக்கியமான காரணம்.
அடுத்ததாக, கொரோனா காலத்தில் அதற்குண்டான உரிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது போன்றவை குறைந்துவிட்டன. இதனால் சர்க்கரை குறைபாடும் ரத்தக் கொதிப்பும் அதிகமாகிவிட்டது'' என்கிறார்.
``கொரோனாவால் ஏற்பட்ட மனஅழுத்தம் என்பது முக்கியமானது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், `இரண்டு, மூன்று மாதங்களுக்குப் படியேறக் கூடாது' எனப் பல அறிவுறுத்தல்களை வழங்கினோம். இதனைக் கடைபிடிக்காமல் இருந்ததும் இதயநோய் பாதிப்புக்கு முக்கிய காரணம். மனஅழுத்தம் அதிகரித்ததால் சர்க்கரை குறைபாடும் வந்துவிட்டது.
கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்தனர். இதனால் உடல் உழைப்பு இல்லாமல் இருந்ததை ஒரு காரணமாக எடுத்துக் கொண்டாலும் எதாவது ஒரு வேலையை செய்து கொண்டுதான் இருந்தார்கள். மக்களிடம் ஏற்பட்ட நிதிச் சுமையும் மன அழுத்தத்துக்கு ஒரு காரணம். மதுவின் பயன்பாடும் அதிகரித்துவிட்டது. மது அருந்திய நபரால் அவரது குடும்பம், நண்பர்கள் எனப் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.