![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/01/06/02.jpg?itok=cplmHI-R)
ஆர். பாத்திமா ரீமா,
தரம் 11 E, ப/ வெளிமடை முஸ்லிம் மகா வித்தியாலயம்,
வெளிமடை.
* உலகின் மொத்த நீர்ப்பரம்பலில் மனிதனுக்குப் பயன்படுத்தக்கூடிய அளவு சுமார் ஒரு வீதம் மட்டுமே.
*தித்திக்கா ஏரி உலகில் மிக உயர்ந்த இடத்தில் அமைந்துள்ள ஏரியாகும்.
* கிரேக்க தத்துவவியலாளரான அரிஸ்டோட்டில் என்பவரே உலகின் காலநிலைப் பரம்பல் பற்றிய கருத்தினை முதன் முதலில் வெளியிட்டார்.
* இலங்கைக்குத் தேயிலைப் பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்தியவர் ஆங்கிலேயரான ஜேம்ஸ் டெய்லர் ஆவார்.
* இலங்கையில் அகலவத்தையில் இறப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது.
* ஆபிரிக்க கண்ட மேடைக்குள் அமைந்துள்ள தீவு மடகாஸ்கார்.
* சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தேயிலை தற்போது உலகின் அனைத்து நாடுகளிலும் பெருமளவு நுகரப்படும் பானமாக உள்ளது.
* இலங்கையில் கனிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் களனிக்கு அருகில் சப்புகஸ்கந்த எனுமிடத்தில் அமைந்துள்ளது.
* ஏற்றுமதிப் பயிர் ஆராய்ச்சி நிலையம் மாத்தளையில் அமைந்துள்ளது.