பிரியா ஆனந்த்
தமிழில் பல படங்களில் நடிகையாக நடித்து மிகவும் பிரபலமான பிரியா ஆனந்த், அடுத்த வருடம் எனக்கு தல தீபாவளி என்று கூறியிருக்கிறார்.
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை பிரியா ஆனந்த் கலந்துக் கொண்டு சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை வழங்கினார்.
பின்னர் நடிகை பிரியா ஆனந்த் பேசும்போது, ‘நான் நிறைய விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த விழா எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நான் எப்போதும் தீபாவளி கொண்டாட மாட்டேன். என்னுடைய பெற்றோர் அமெரிக்காவில் இருப்பதால் என்னுடைய பாட்டி கூடதான் மிகவும் எளிமையாக தீபாவளி கொண்டாடுவேன். ஆனால், இந்த வருடம் உங்களுடன் தீபாவளி கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் நானும் ஊடகவியல் படித்திருக்கேன்.
நான் சினிமா துறைக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. வணக்கம் சென்னை படம் தான் நான் நடித்ததில் ரொம்ப பிடித்தது. ஹீரோவுக்கு நிகராக என்னுடைய கதாபாத்திரமும் இருக்கும். இந்த 10 வருசத்துல எனக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம் ஸ்ரீதேவி அவர்களுடன் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்ததுதான். அவரை ரொம்ப மிஸ் பண்றேன். இந்தி நடிகைகளுக்கு கூட ஸ்ரீதேவியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.