![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/02/08/q3.jpg?itok=CHy2Itb_)
2022மற்றும் 2024ம் ஆண்டுக்கான 19வயது கீழ் இளைஞர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வெற்றிகரமான அணியொன்றை உருவாக்குவதை இலக்காகக்கொண்டு நீண்டகால திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் 15வயதுக்கு கீழான மேம்படுத்தப்பட்ட இரண்டு அணிகளை கொழும்பு மற்றும் தம்புள்ள ஆகிய பிரதேசங்களில் நிறுவி செயற்படுத்த இலங்கை கிரிக்கெட் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை கிரிக்கெட் ஏற்பாட்டில் நடைபெற்ற 15வயது கீழான மாவட்ட மற்றும் மாகாண போட்டித் தொடரில் திறமையாக விளையாடிய 54வீரர்கள் இந்நிகழ்ச்சி திட்டத்தில் உள்ளெடுக்கப்பட்டுள்ளார்கள். இரண்டு கட்டமாக முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தில் முதலாவது கட்டம் 35பேரின் பங்களிப்புடன் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்திலும் இரண்டாவது கட்டம் கண்டி, மாத்தளை, யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த 19வீரர்களின் பங்களிப்புடன் ரங்கிரி தம்புள்ள சர்வதேச விளையாட்டரங்கில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் நிறுவப்பட்டுள்ள உயர் திறமை மேம்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் டிம் மெக்கெஸ்கிலின் வழிகாட்டலின் கீழ் செயல்படுத்தப்படும் இந்நிகழ்ச்சித் திட்டத்தை கண்காணிக்க முன்னாள் கிரிக்கெட் அணி தலைவரான அநுர தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களைத் தவிர கிரிக்கெட் சபை பயிற்சி பிரிவில் சேவையிலீடுபட்டுள்ள ரோய் டயஸ், சுமித்ரா வர்ணகுலசூரிய, ரவீந்திர புஷ்பகுமார மற்றும் தம்மிக்க சுதர்சன இங்கு பயிற்சியாளராக ஈடுபடுவார்கள்.
பெற்றோர்களுக்கு அறிய தந்த பின்னர் அமைக்கப்பட்ட பயிற்சி அணிக்குரிய அனைத்து வீரர்களினதும் தகவல்கள் சேகரிப்பு வீரரின் திறமை மற்றும் பலவீனங்களை ஆராய்ந்து இலங்கை கிரிக்கெட் புலனாய்வு மையத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இப் பயிற்சிகளின் படி தெரிவுசெய்யப்படும் 54 வீரர்கள் முதலில் 6 மாத பயிற்சி மற்றும் விழிப்புணர்வூட்டலுக்கு உட்படுத்தப்படுவதோடு அதற்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், தங்குமிட வசதிகள் அனைத்தையும் இலக்கை கிரிக்கெட் பெற்றுக்கொடுக்கும். இந்நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த உயர் திறமை மேம்படுத்தல் மத்திய நிலையத்தின் தலைவர் டிம் மெக்கெஸ்கில் மைதானத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மாத்திரமல்லாது அதற்கப்பாலும் இது தொடர்பாக கவனம் செலுத்தப்படும். இந்நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் வீரர்களின் எதிர்காலத்தை வெற்றியடைய செய்வதே முதல் நோக்கமாகும். இங்கு விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் பயிற்சி அவர்களின் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக பெரும் பங்களிப்பை வழங்கும்.