கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் சில நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இந்த தகுதி சுற்று ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக ஐ.சி.சி. அறிவித்தது.
7-வது 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 8-வது 20 ஓவர் உலககிண்ண போட்டி அடுத்த ஆண்டு (2022) அவுஸ்திரேலியாவில் நடத்தப்படுகிறது. 2022-ம் ஆண்டு உலக கிண்ண போட்டிக்கான ஆசியா ஏ மண்டலத்திற்கான தகுதி சுற்று அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ம் திகதி முதல் 9-ம் திகதி வரை குவைத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதில் பஹ்ரைன், குவைத், மாலைதீவு, கட்டார், சவுதி அரேபியா ஆகிய அணிகள் பங்கேற்க இருந்தன. கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் சில நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இந்த தகுதி சுற்று ஒக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக ஐ.சி.சி. அண்மையில் அறிவித்தது.
இதே போல் ஆபிரிக்க மண்டலத்திற்கான தகுதி சுற்று ஏ, பி என்று இரு வகையாக பிரிக்கப்பட்டு தென்ஆபிரிக்காவில் அடுத்த மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டியும் ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்திபோடப்பட்டுள்ளது.