இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரிட்டன் சென்றுள்ளார். நேற்று (17) அதிகாலை 3.15மணியளவில் ஜனாதிபதி பிரிட்டனுக்கு புறப்பட்டார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகமென தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகள் நாளை 19ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி நாளை மறுதினம் 20ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.